திமுக கூட்டணி கட்சிகள் பலமாக இருந்தாலும் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி அவர்களை பெரும் சேதாரமாக்கும் என்று, தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், செவிலியர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து அரசு ஊழியர்களும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவதாக கூறினார்.
வரும் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்கு பிரதிபலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
















