ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஈரானின் அணு மற்றும் ராணுவ நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது.
அடுத்த 2 முதல் 3 நாட்களில் அணு திட்டம் தொடர்பான நீண்டநாள் சர்ச்சைக்கு தீர்வுகாண, மாற்று முன்மொழிவை ஈரான் தயாரிக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு தரப்பும் சில வழிகாட்டு கொள்கைகள் குறித்த புரிதலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் 10 முதல் 15 நாட்களுக்குள், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரான் மீது குறுகிய ராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, செனட் சபையின் அனுமதியின்றி ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாத வகையில், தீர்மானம் நிறைவேற்ற வரும் வாரத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் தூதரக முயற்சிகள் மேலும் சிக்கலாகும் என ஈரானும் சுட்டிக்காட்டியுள்ளது.
















