இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், குடியரசுத் தலைவர் மாளிகையில், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஆண்டுதோறும்
பிப்ரவரி 23ம் தேதி கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், டெல்லியில் ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாகவும், இந்த தொழில்நுட்பத்தை எதிர்காலத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பாடம் உலக நாடுகளுக்கு கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்பொழுது டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கனடா நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும்,
அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டன்கூட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார். அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஒருவர், சண்டிகரை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.
கேரளாவில் உயிரிழந்த சின்னஞ்சிறு குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் உறுப்பு தான முயற்சிகளில் குழந்தையின் தியாகம் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 23ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.
















