சென்னை வியாசர்பாடியில் இளம்பெண் ஒருவருக்கு பார்சலில் மனித எலும்புக்கூடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்த ஸ்ருதி, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் டூல்ஸ் கடையில் கடந்த 14 ஆண்டுகளாக கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த சூழலில் கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர், காவலாளியிடம் ஸ்ருதி பெயரில் வந்த பார்சலை ஒப்படைத்து சென்றுள்ளார்.
தனக்கு பார்சல் வர வாய்ப்பில்லை என்று ஸ்ருதி கூறியதால், கடை உரிமையாளர் முன்னிலையில் பார்சல் பிரித்து பார்க்கப்பட்டது.
அப்போது அதற்குள் மண்டை ஓடு, எலும்புக்கூடு, விபூதி இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த எஸ்பிளனேடு போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















