ஒரு மதத்திலிருந்து வெளியேறாமல் சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோர முடியாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
சிவகங்கையை சேர்ந்த செல்வமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தான் எந்த சாதியோ, மதமோ சார்ந்தவர் இல்லை என தனக்கு சான்று வழங்க உத்தரவிடக் கோரி இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரர் இந்து மதத்திலிருந்து வெளியேறி விட்டதாக எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் மனுதாரர் தனது மதத்திலிருந்து வெளியேறியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்து,
அதன் பின்னர், மதம் சாதி இல்லை என புதிய விண்ணப்பம் தந்தால் அதை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி பரிசீலிக்கலாம் என்று தெரிவித்த நீதிபதி,
விதிகள் இல்லாவிட்டால் தேவையான விதிகளை உருவாக்கிய பிறகு மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
















