ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும், நீண்டகால கொள்கையில் கவனம் செலுத்துவும் உதவும் என, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் ஆங்கில நாளிதழான, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமத்தால், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதிக்கான தேசிய மாநாடு நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வணிகத்தை எளிதாக்குதல், டிஜிட்டல் நிர்வாகம், ஜிஎஸ்டி போன்ற கொள்கை சீர்த்திருத்தங்கள் மூலம், அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஒட்டுமொத்த மக்களும் பொறுப்புடன் பங்கேற்பதை உறுதிசெய்வதில் தேர்தல் செயல்முறைகள் முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும் நீண்டகால கொள்கையில் கவனம் செலுத்தவும் உதவும் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
















