கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு தனியார் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியதாலும், அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்ததாலும், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு பொதுமக்களை அழைத்துச் செல்வதற்காக, திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அளவிலான தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
இதனால் அவிநாசியில் இருந்து திருப்பூர், மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, கருவலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல உரிய நேரத்தில் தனியார் பேருந்துகள் இல்லாததால், அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
மேலும், அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்தில் பெண்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறியதுடன், படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
















