சென்னையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு தஞ்சை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குழந்தைகள் சிறப்பு சேவைகள் துறை சார்பில், அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் ஆதரவற்ற மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னையில் நடந்தன.
இதில், விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் தஞ்சை மண்டல அணியினர், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர்.
இந்நிலையில், வெற்றிக் கோப்பையுடன் ரயில் மூலம் தஞ்சை வந்திறங்கிய மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
















