திமுகவை போல் வாக்குறுதி அளித்துவிட்டு மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், குடும்ப அட்டை தாரர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
.
















