சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை மற்றும் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியோடு வசித்து வந்துள்ளார். அதே குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்க வந்த சங்கீதா என்பவர், தொழிலதிபரின் மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது பேசிப் பழகி வந்துள்ளார். இதற்கிடையே சங்கீதாவின் மகன் திலீப் என்பவருக்கும், தொழிலதிபரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து தங்கம், வைர நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திலீப் பெற்ற நிலையில், மேலும் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டியதாகவும், அதை தராததால் தனிமையில் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சங்கீதா தனது மகன்களுடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலதிபரின் மனைவி அளித்த புகாரின்பேரில் வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சங்கீதா, அவரது மற்றொரு மகன் அங்கீத் ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய நபரான திலீப்பை தேடி வருகின்றனர். ஏற்கனவே பேஸ்புக்கில் பழகி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















