பரமக்குடி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் அமைச்சர் திறப்பதற்கு முன்பே ஜவுளிப் பூங்கா செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கைத்தறி பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜவுளி பூங்காவை அமைச்சர் காந்தி நாளை திறப்பதாக இருந்தது. இந்நிலையில், அமைச்சர் திறந்து வைப்பதற்கு முன்னதாகவே நெசவாளர்கள் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















