தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், எளிய மக்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவருமான, தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணு அவர்களின் மறைவு மிகுந்த மன வருத்தமளிக்கிறது என கூறினார்
மேலும் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டார் எனவும் சமூகத்தில் நிலவிய சாதிய தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தார் என தெரிவித்துள்ளார்
தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்
அய்யாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் என மத்திய அமைச்சர் இரங்கல் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
















