சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மார்ச் 24 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முகாந்திரம் உள்ளதாகக்கூறி மார்ச் 24 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக பொன்முடிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
















