மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை என, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெறவுள்ளது.
அன்றைய தினமே பிரதமர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியும் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அங்கு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான பொன் பாலகணபதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் பாலகணபதி, பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை என தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
















