சென்னை அம்பத்தூர் அருகே ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு இரண்டு சொகுசு கார்களின் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அம்பத்தூர் அடுத்தபுதூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 சொகுசு கார்களை மடக்கி சோதனை செய்ததில் 300 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
















