கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள திமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள ரவுண்டானாவில், முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவையொட்டி திமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர்.
இடையூறாக உள்ள இந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















