டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.
இலங்கையின் பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, ‘சவுத்’ (Saud) என்ற பாகிஸ்தான் ரசிகருக்கும், இங்கிலாந்து ஆதரவாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இங்கிலாந்து ரசிகர்கள் தன் மீது பீர் ஊற்றி தவறாக நடந்து கொண்டதாகவும், அதனாலேயே தான் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியதாகவும் சவுத் குற்றம் சாட்டியுள்ளார். மோதல் முற்றிய நிலையில், அங்கிருந்த உள்ளூர் இலங்கை ரசிகர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இதனிடையே ஜேக் ஜானிங்ஸ் என்ற ஆஸ்திரேலிய இன்ஃப்ளூயன்ஸர், சவுத் ஒரு தொடர் குற்றவாளி என்றும் அவர் மைதானத்தில் எதிரணி ரசிகர்களை வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய ரசிகர்களிடமும் சவுத் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
















