மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் மேம்பாலத்தினை டிசம்பர் 7ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அவசரகதியில் திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வேலு நாச்சியார் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அதில் இந்து மத அடையாளமான குங்கும பொட்டை , தமிழக அரசும் நெடுஞ்சாலைத்துறையும் வேண்டுமென்றே வரையாமல் புறக்கணித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளளனர்.
உடனடியாக வேலு நாச்சியாரின் நெற்றியில் குங்கும பொட்டை வரைய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















