கோவையில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வருகை புரிவதை ஒட்டி எல் அண்ட் டி பைபாஸில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் உருவானது.
இது தொடர்பாக தமிழ் ஜனம் செய்தியும் வெளியிட்டது. இந்நிலையில் செந்தில்குமார் என்பவர் சென்ற இருசக்கர வாகனம் திமுகவின் கொடிக்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அவர் காயமடைந்த நிலையில், அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் திமுக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















