ஈரான் மீது போர் எப்போது? - தாமதிக்கும் அமெரிக்கா : தவிக்கும் கடற்படையினர்!
Mar 15, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது போர் எப்போது? – தாமதிக்கும் அமெரிக்கா : தவிக்கும் கடற்படையினர்!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் வீரர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்தது. தொடர்ந்து பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த தவறிய ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை ஒடுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஈரானில் ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்தியகிழக்கு பகுதியில் தனது இராணுவக் குவிப்பை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் இரண்டு பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பல போர் விமானங்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் என்பதால் இரண்டு போர்க் கப்பல்களிலும் ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் சுமார் 5000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் முதலே உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கடலில் தான் சுற்றிவருகிறது.

முதலில் மத்தியதரைக் கடலுக்குச் சென்ற இந்தப் போர்க்கப்பல், பின்னர் கரீபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அட்லாண்டிக் முழுவதும் சுற்றி சென்றது. இப்போது USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு மீண்டும் மத்திய கிழக்கு நோக்கிச் சென்றுள்ளது.

ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் அந்நாட்டை அணுசக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கையெழுத்திட வைப்பதற்காக அமெரிக்கா ஈரானை தாக்காமல் நாட்களை கடத்தி வருகிறது.

பொதுவாக, அமைதி காலத்தில் ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பல் கடலில் 6 மாதங்கள் வரையே நிறுத்தப்பட்டிருக்கும். ஏற்கெனவே 8 மாதங்களாக கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு கப்பலின் கடல் இருப்பு மேலும் 11 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நீட்டிப்பு குறித்து கப்பல் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி டேவிட் ஸ்கரோசி தெரிவித்ததும் கப்பலில் உள்ள அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று ஆசையோடு காத்திருந்த குடும்பத்தினர் ஏமாற்றமடைந்தனர்.

கடந்த ஜனவரி மாதமே போர்க் கப்பலின் பராமரிப்பு வேலைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் பல உபகரணங்கள் பழுதடைந்து விட்டதாகவும்,குறிப்பாக போர்க்கப்பலின் பிளம்பிங் அமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

இந்தப் போர்க் கப்பலில் செயல்படாத நிலையில் இருக்கும் பல கழிப்பறைகளைப் பழுது பார்க்கும் பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

போர்க் கப்பலின் இயக்கங்கள் நாட்டின் இராணுவ இரகசியம் என்பதால், இந்தக்கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடமும் கூட தொடர்பு கொள்ள முடியாது என்பது தான் உண்மை.

எட்டு மாதங்களுக்கும் மேலாக இப்படி இருப்பதால் போர்க்கப்பலில் இருப்பவர்கள் கடும் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 12 மாதங்களாக ஒரு மாலுமி தனது இளம் குழந்தையை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மற்றொரு மாலுமி தனது கொள்ளு தாத்தா பாட்டியின் இறுதி நாட்களைத் தவறவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் என அனைத்து சந்தோஷங்களையும் தவறவிட்டு நடுக்கடலில் இருக்கும், இந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் கடற்படையில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: AmericanAmerican warshipsUS expectedWARattackIranus
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் – அமித்ஷா!

Next Post

உக்ரைனில் உருவாகி வரும் மக்கள் தொகை பேரழிவு – குறையும் குழந்தை பிறப்பு : கேள்விக்குறியான எதிர்காலம்! – சிறப்பு தொகுப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies