1500 ஆண்டுகள் பழமையான ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத அறநிலைய துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட ராஜதானி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ராஜதாணி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து 18 கிராம மக்களும் முளைப்பாரியை எடுத்துக்கொண்டு கால்நடையாக சென்று கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
தற்போது திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டு காலமாக இக்கோயிலை சீரமைக்கவில்லை.இந்நிலையில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் இக்கோயிலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், அரசே கோயிலை புனரமைப்பு செய்யாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
















