ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு 7வது நாளாக கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தில், உலாவிய காட்டு யானை, கடந்த 20ம் தேதி மயங்கி விழுந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
எனினும் யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதையடுத்து வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், 7வது நாளாக யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே யானையை முதன்மை தலைமை வன பாதுகாவலர் உதயன் பார்வையிட்டார்.
அப்போது யானையை நடக்க வைப்பதற்கான அனைத்து உயர் சிகிச்சைகளையும் அளிக்க கால்நடை மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
















