காவலர்கள் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறும் எதிர்க்கட்சியினர் அதனை நிரூபிக்க முடியுமா? புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
புதுச்சேரி காவல்துறையில் காலியாக இருந்த 207 காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில் தகுதி பெற்ற காவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா கம்பர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விழாவில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் காவலர் தேர்வு குறித்து குற்றம்சாட்டும் எதிர்க்கட்சியினர் அதனை நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
















