ஆப்கானிஸ்தான் உடன் நேரடி போரை பாகிஸ்தான் பிரகடனம் செய்துள்ளது .
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், பொறுமைக்கு எல்லை உண்டு என்றும், இனி இது பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான நேரடி போர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தங்கள் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
















