தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜகவினர் வேல் பூஜை செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் பாஜகவினர், வெள்ளி வேல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து , சிறப்பு பூஜை செய்த வேலை, திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள கிராம கோயில்களில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடியிடம் இந்த வெள்ளி வேலினை கொடுப்பதற்காக சிறப்புப் பூஜை செய்யப்பட்டதாக பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
















