விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பதில் சொல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அரசியலுக்கு வந்துவிட்டால், தீப்பந்தத்திற்குள் மனிதன் சென்று வருவது போலத்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்தால் தோண்டப்படாத தனிப்பட்ட விஷயங்கள், தோண்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் அரசியலுக்கு வரும்போதே இதை உணர்ந்துதான் வந்திருப்பார் என்று நம்புகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















