சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மானாமதுரை 10-வது வார்டு பகுதியின் கவுன்சிலராக பாஜகவைச் சேர்ந்த நமகோடி என்பவர் இருந்து வருகிறார். அப்பகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பாஜக கவுன்சிலர் நமகோடி தலைமையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கூறினர்.
அதற்கு மறுப்பு தெரிவித்தால் பாஜக கவுன்சிலர் நமகோடிக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
















