திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7ம் நாள் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார்.
இந்த நிலையில் 7ம் நாள் திருவிழாவை ஒட்டி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சண்முகர் மேளதாளத்துடன் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















