ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுறாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் முழுவதும் சிறப்பு நிரந்தர அவசரகால நிலையை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.
இஸ்ரேல் – ஈரான் போா் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நகரங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரான் தனது பதிலடியை கொடுத்துள்ளது.
ஈரான் தாக்குதலின் காரணமாக இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன.
சரணடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குலை நடத்தியது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால், இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரானை தாக்கி வருகின்றன. இதனை தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தனது மிகப்பெரிய நேரடித் தாக்குதலை தொடங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானின் ஆபத்தான செயல்பாடுகள் அமெரிக்காவிற்கும், உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக விளங்குகிறது என கூறியுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என தெரிவித்துள்ள டிரம்ப், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
















