ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலை தொடங்கியது - டிரம்ப்!
Jul 28, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலை தொடங்கியது – டிரம்ப்!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுறாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் முழுவதும் சிறப்பு நிரந்தர அவசரகால நிலையை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.

இஸ்ரேல் – ஈரான் போா் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நகரங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரான் தனது பதிலடியை கொடுத்துள்ளது.

ஈரான் தாக்குதலின் காரணமாக இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன.

சரணடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குலை நடத்தியது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால், இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரானை தாக்கி வருகின்றன. இதனை தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தனது மிகப்பெரிய நேரடித் தாக்குதலை தொடங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானின் ஆபத்தான செயல்பாடுகள் அமெரிக்காவிற்கும், உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக விளங்குகிறது என கூறியுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என தெரிவித்துள்ள டிரம்ப், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Benjamin netanyahuTrumpnuclearamericaArmyWARattackIranisreal
ShareTweetSendShare
Previous Post

ஓபிஎஸ் ரூ.3லட்சம் ஏமாற்றியதாக கூறி அதிமுக பிரமுகர் போஸ்டர்!

Next Post

அமெரிக்கா – ஈரான் போர்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை – அவசர உதவி எண்கள் அறிவிப்பு

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies