ஈரான் மீதான திடீர் தாக்குதலின் பின்னணியில், ஒரு ரகசிய அறிக்கை இருப்பதாக சர்வதேச ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சர்வதேச அணுசக்தி முகமை அண்மையில் அமெரிக்காவுக்கு ஒரு ரகசிய அறிக்கை வழங்கியதாகவும், அதில் ஈரான் தன் அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஈரான், யுரேனியம் எங்கு, எவ்வளவு இருப்பு வைத்துள்ளது என்பதை, தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே அமெரிக்கா போரை தொடங்குவதற்கு முக்கிய உந்துதலாக அமைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
















