மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் விமான போக்குவரத்து மிகப்பெரிய சிக்கலை எதிர்க்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இணைப்பு விமானங்களுக்கு துபாய்தான் முக்கிய விமான நிலையமாக விளங்குகிறது. ஈரான் தாக்குதலால் அந்த விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. மாற்று வழிகளில் விமானங்கள் இயக்கப்படுவதால், எரிபொருள் செலவு அதிகரித்து, விமான டிக்கெட் கட்டணங்கள் முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
















