ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக அயதுல்லா அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். அவரது மறைவு ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் அடுத்த உச்சத்தலைவராக யார் வருவார் என்பது குறித்து பெரும் விவாதம் எழுந்தது.
இந்த சூழலில் அந்நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்பான நிபுணர்கள் அவை கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அலிரேசா அராபி, நாட்டின் சட்டங்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் 12 பேர் கொண்ட குழுவில் ஒருவராகவும், அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட Assembly of Experts அவையின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அவர்களின் அடுத்த இலக்காக அலிரேசா அராபி மாறலாம் என அந்நாட்டு மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.
















