திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் - காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!
Mar 15, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் – காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 08:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாததால் பல்வேறு இந்து அமைப்புகள் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை மற்றும் ஆண்டாள் பேரவை சார்பில் கிரிவலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கிரிவலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு கிரிவலம் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கையில் வேல் ஏந்தி கிரிவலம் மேற்கொண்டனர். கிரிவலத்தில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் கிரிவலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தீபம் ஏற்ற வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக மாநில ஆன்மிக பிரிவு தலைவர் ஷெல்வி முருக பக்தர்களின் கிரிவலம் விரைவில் தீபம் ஏற்றும் விழாவாக மாறும் என உறுதி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் முருக பக்தர்களின் எழுச்சியே கிரிவலம் என தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் மேற்கொண்ட கிரிவலம் இரவிலும் தொடர்ந்தது. இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கிரிவலம் சென்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

Tags: Thiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestgirivalamthiruparankundram muruganNainar Nagendranthiruparankundram judgementThiruparankundramkadeswara subramaniyamThiruparankundram hill
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!

Next Post

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies