திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் - காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!
Jun 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம் – காடேஸ்வரா சுப்பிரமணியம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 08:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாததால் பல்வேறு இந்து அமைப்புகள் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை மற்றும் ஆண்டாள் பேரவை சார்பில் கிரிவலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கிரிவலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு கிரிவலம் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கையில் வேல் ஏந்தி கிரிவலம் மேற்கொண்டனர். கிரிவலத்தில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் கிரிவலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தீபம் ஏற்ற வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருவதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக மாநில ஆன்மிக பிரிவு தலைவர் ஷெல்வி முருக பக்தர்களின் கிரிவலம் விரைவில் தீபம் ஏற்றும் விழாவாக மாறும் என உறுதி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் முருக பக்தர்களின் எழுச்சியே கிரிவலம் என தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் மேற்கொண்ட கிரிவலம் இரவிலும் தொடர்ந்தது. இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கிரிவலம் சென்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

Tags: Thiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestgirivalamthiruparankundram muruganNainar Nagendranthiruparankundram judgementThiruparankundramkadeswara subramaniyamThiruparankundram hill
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!

Next Post

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies