டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் மூலம் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின் வாயிலாக தொகுதி பங்கீட்டுக்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக பாஜகவுடன் தொகுதி பங்கிட்டை இறுதி செய்த பிறகு, மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து, அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















