ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணு ஆயுதம் தயாரித்ததால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்தன. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டு ராணுவமும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புனித நகரமான கியோமில் உள்ள நிபுணர்கள் அவை கட்டத்தில் 88 மத குருமார்கள் கூடி அவரை தேர்ந்தெடுத்தனர்.
இந்நிலையில், உச்சத் தலைவர் தேர்வு செய்யப்படுவதை அறிந்த இஸ்ரேல் ராணுவம், நிபுணர்கள் அவை கட்டடம் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதலை நடத்தியது.
ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் கட்டடத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ஈரானுக்கு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைத் தடுப்பதே தங்களது நோக்கம் நோக்கம் எனக் கூறியுள்ளார்.
















