பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை பகுதியில் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலக்கரை பகுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
காவல்துறையின் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த்துறை ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், விஏஓ உள்ளிட்ட அலுவலகங்களில் பணிகள் நடைபெறாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
















