ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் மூண்டுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க அமெரிக்கா இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க 30 நாட்கள் தற்காலிக அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், கச்சா எண்ணெய் விநியோக தடையைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய எரிசக்தி சந்தையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கருவூலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
















