அசாமில் இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமான படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்ய தயாரிப்பான சுகோய் சூ 30 எம்கேஐ போர் விமானம், இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சுகோய் சூ 30 ரக விமானங்கள் 1997 ல் இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. 250 விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ள நிலையில், தற்போது அதனை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அசாமின் ஜோர்ஹட் தளத்தில் இருந்து பயிற்சிக்காக கிளம்பிய விமானம் நேற்றிரவு 7 மணியளவில் ரேடார் தொடர்பை இழந்தது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் அசாமின் கர்பி ஆங்லாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோரின் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
















