திருப்பூரில், சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது.
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில், 18-வது சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பின்னலாடை தொழில் துறையை சார்ந்த உற்பத்தியாளர் சங்கத்தினர், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
360 அரங்குகளில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 270 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தையல் இயந்திரம் , லேப் டெஸ்டிங் ஆய்வகம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் அமைப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை சார்பில், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
















