விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் - சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை
Jul 28, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் – சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை

Manikandan by Manikandan
Mar 6, 2026, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாயமான Su-30MKI போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விபத்துக்கு காரணம் என்ன?

ரஷ்யாவின் சுகோய், இரட்டை இருக்கைகள் கொண்ட பல்திறன் கொண்ட போர் விமானம் ஆகும். நீண்ட தூர தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன போர் விமானங்கள் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளை எடுத்துச் சென்று தாக்கும் திறன் கொண்டவையாகும்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட Su-30MKI போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் முக்கிய அங்கமாக உள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் முதுகெலும்பாக உள்ளது.

முதன்முதலில் 1997-ல் முதன்முதலாக ரஷ்யா இந்தியாவுக்கு சுகோய் போர் விமானங்களை வழங்கியது. தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த சுகோய் போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட சுகோய்-30 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

சூப்பர் சோனிக் ரக தொழில்நுட்பத்தில் இயங்கும் சுகோய் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதே இந்த சுகோய் போர் விமானத்தின் சிறப்பம்சமாகும்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து கிளம்பி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கா்பி அங்லோங் மாவட்ட வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஜோர்ஹட் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு திடீரென துண்டிக்கப்பட்டது. சுகோய்-30 போர் விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.

இந்நிலையில் கர்பி அங்லோங்கில் உள்ள மலைப் பாங்கான வனப்பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போா் விமானத்தைத் தேடும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட்டது.

ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் இந்த சுகோய் போர் விமானம் விபத்துகுள்ளானதாகவும் விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம், சர்ச்சைக்குரிய இந்திய – சீன எல்லை பகுதியில்தான் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.

இந்த வடகிழக்கு எல்லையருகே சீனாவின் விமானப்படை தளமும் உள்ளதால், சுகோய் போர் விமான விபத்துக்குச் சீனாவின் தந்திரம் காரணமா? என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சீனாவின் விமானப்படை தளத்தில் இருந்து வந்த ரேடார் சிக்னல்கள், சுகோய் – 30 போர் விமானத்தை தவறாக வழிநடத்தியதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: missing Su-30MKI fighter jetIndian Air Forceboardtwo pilotsconfirmedCrashed Su-30MKI aircraft
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி!

Next Post

அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா – காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies