அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா - காரணம் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Apr 21, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா – காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் வானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விமானங்கள் சீறிப் பாய்ந்து உலகமே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற நோக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா ஏன் அமெரிக்கப் போர் விமானங்களை வாங்குவதில்லை என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிக பெரிய அளவில் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ரஷ்யாவுடன் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிரான்சிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் என பாதுகாப்பு கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளபோதிலும், அமெரிக்காவிடமிருந்து எந்த போர் விமானத்தையும் வாங்க முன் வரவில்லை.

இரண்டாவது முறை அதிபரான பிறகு அதிபர் ட்ரம்ப், உலக அளவில் பிரபலமான F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். ஆனாலும் அமெரிக்காவின் F-35, F-16 போன்ற போர் விமானங்கள் மீது இந்தியா ஆர்வம் காட்டவே இல்லை.

அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள், இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கும். இந்தியா ஏன் அமெரிக்காவின் போர் விமானங்களை மட்டும் வாங்க மறுப்பதற்கு வரலாற்று ரீதியாகவே நிறைய காரணங்கள் உள்ளன.

பனிப்போரின் போது ​​F-86, F-104 ஸ்டார்ஃபைட்டர், F-86D, A-37, F-16 என முக்கியமான போர் விமானங்கள் உட்பட பல ஆயுதங்களைப் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியது. அவற்றையெல்லாம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போர்களில் பயன்படுத்தியுள்ளது.

சோவியத் ரஷ்யாவின் மிக் ரக போர் விமானங்கள் மற்றும் சுகோய்-30MKI விமானங்கள், பிரிட்டனின் ஜாகுவார் விமானங்கள், பிரான்சின் மிராஜ் ரக விமானங்கள் என இந்தியா அமெரிக்காவை நம்பாமல் தனக்கான அடையாளத்துடன் கூடிய விமானப் படையை உருவாக்கியது.

1998-ல் இந்தியாவின் அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து அப்போதைய அதிபர் பில் கிளிண்டன், இந்தியா மீது பொருளாதார தடை விதித்தார். அதனால், அமெரிக்காவுடன் ராஜதந்திர உறவுகள் சீர்குலைந்தன.

அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் நாடுகள் அந்த போர் விமானங்களின் பராமரிப்பு உதிரி பாகங்கள் போன்ற தேவைகளுக்கு அமெரிக்காவையே நம்பி இருக்கும் நிலை ஏற்படுகிறது.

F-16 போர்விமானத்தை வாங்கிய துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் உதிரி பாகங்களை அமெரிக்கா மறுத்த வரலாறு இருக்கிறது.

2019ஆம் ஆண்டு நடந்த பிப்ரவரியில் பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் பயன்படுத்திய F-16 விமானத்தை சோவியத் கால மிக்-21 பைசனை வைத்தே இந்தியா சுட்டு வீழ்த்தியது.

இது இனி எப்போதாவது அமெரிக்க போர் விமானங்களை இந்தியா வாங்குமா என்ற கேள்விக்கு இல்லை என்பதை உலகறிய எடுத்துக்காட்டியது.

அதன் பிறகும் ஈகிள் II போர் விமானத்தின் மேம்பட்ட பதிப்பான F-15 போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முயன்று தோல்வி கண்டது.

ஒரு போர் விமானம் என்பது வெறும் ஆயுதமல்ல. அது நாட்டின் வான்வெளியை சொந்த விதிமுறைகளின்படி பாதுகாக்கும் திறன் கொண்ட இறையாண்மை யாகும்.

நாட்டின் இறையாண்மை கொண்ட வான்வெளியின் சாவியை தன்னிடமே வைத்து கொள்வது தான் சிறந்தது. இது ஆரம்பத்திலேயே சுதந்திர இந்தியா கற்றுக்கொண்ட பாடமாகும்.

பிரதமர் மோடி தலைமையிலான நவீன இந்தியா அமெரிக்காவுடன் நல்ல இருதரப்பு உறவுகளைக் கொண்டிருந்த போதும் இந்திய வான்வெளிக்கான இறையாண்மையை கைவிடவில்லை.

வாசிக்க நேரமில்லையென்றால் இந்த ஆடியோவே கேளுங்கள்::

https://tamiljanam.com/wp-content/uploads/2026/03/simran.mp3

Tags: IndianAmericandefense sectorUS ArmyIranianIranian skiesPM ModiIsraeli planes fly overIndiapieceflightskiesbjp indiatn bjp
ShareTweetSendShare
Previous Post

விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் – சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை

Next Post

ஈரான் போர் எதிரொலி – கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

Related News

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies