யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்வர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைய வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு சேவையாற்ற தயாராக உள்ள வெற்றியாளர்களுக்கு தனது வாழ்த்துகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வில் தேர்ச்சி பெறாத முடியாதவர்களுக்கு இதுபோன்ற தருணங்கள் கடினமாக இருக்கக்கூடும் என்பதை நான் அறிவேன் என கூறியுள்ள பிரதமர், ஒரு பெரிய பயணத்தில் இது ஒரு சிறு தொடக்கம் மட்டுமே என கூறியுள்ளார்.
இம்முறை தோல்வி அடைந்தவர்கள் தொடர் முயற்சி மூலம் வெற்றிப்பெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
















