லேசர் ஆயுதங்களை பயன்படுத்தும் அமெரிக்கா..நொடியில் எரிந்து சாம்பலாகும் ட்ரோன்கள்..சிறப்பு தொகுப்பு!
Mar 19, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லேசர் ஆயுதங்களை பயன்படுத்தும் அமெரிக்கா..நொடியில் எரிந்து சாம்பலாகும் ட்ரோன்கள்..சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Mar 7, 2026, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா லேசர் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆயுதங்கள் குறித்தும், அவற்றின் துல்லிய தன்மை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரான் உடனான போரில் THAAD, Patriot போன்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும், ‘ஸ்டெல்த்’ (Stealth) ரக போர் விமானங்களையும், SM-3 ஏவுகணைகளையும் அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. மேலும், நிலத்திற்கு அடியில் உள்ள இலக்குகளை தாக்க 30,000 பவுண்டு எடையுள்ள Bunker Buster-களையும், ஏவுகணை ஏவுதளங்களை கண்காணிக்க Space Force அமைப்பையும் உபயோகப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க லேசர் ஆயுதங்களையும் அமெரிக்கா தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்நாட்டின் கடற்படை வெளியிட்டுள்ளது. அதில், HELIOS எனப்படும் அதிநவீன லேசர் ஆயுத அமைப்பின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த HELIOS அமைப்பானது, அதிகபட்சமாக 120 கிலோவாட் வரை அதிக ஆற்றல் கொண்ட லேசர் கற்றைகளை வெளியிடும். அந்த லேசர் ஒளியை எதிர்கொள்ளும் எதிாி நாடுகளின் ட்ரோன்கள், சிறிய ரக படகுகள் உள்ளிட்டவை நொடிப்பொழுதில் உருகி விடும் அல்லது எரிந்து சாம்பலாகி விடும்.

அத்துடன், தாக்க வரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மீதும், சென்சார்கள் மீதும் இந்த லேசர் அமைப்பு அதிகப்படியான ஒளியை செலுத்தும். இதனால், ட்ரோன்களும், ஏவுகணைகளும் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவே செயலிழக்கும் சூழலுக்கு தள்ளப்படும்.

HELIOS லேசர்கள் சிறந்த கண்காணிப்பு அமைப்பாகவும் விளங்குகின்றன. இவற்றை பயன்படுத்தி தொலைதூரத்தில் உள்ள எதிர்படைகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். ஒரு ஏவுகணையை வாங்க பல கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், இந்த லேசர் தாக்குதலை நடத்த ஒரு சில டாலர்கள் இருந்தாலே போதும். மின்சார சேமிப்பு இருக்கும்வரை, தொடர்ந்து லேசர் தாக்குதல்களை நடத்திகொண்டே இருக்கலாம். இதனால், அமெரிக்காவுக்கு பல லட்சம் டாலர்கள் மிச்சமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த லேசர்கள் ஒளியின் வேகத்தில் பயணிப்பதால், இலக்குகளை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தாக்கி அழிக்கின்றன. கடந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க கடற்படை இந்த HELIOS லேசர் அமைப்பை கொண்டு பரிசோதனை ஒன்றை மேற்கொண்டது. கடல் பகுதியில் நடத்தப்பட்ட அந்த சோதனையின்போது ஒரே நேரத்தில் 4 ட்ரோன்களை லேசர் கதிர்வீச்சு தாக்கி அழித்தது. இது லேசர் ஆயுதங்களின் சோதனையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது.

இந்த சூழலில்தான், ஈரானுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதங்களை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக பேராசிரியரான டேவிட் ஜியார்னிக், ஈரானின் ஏவுகணைகளை கண்டறியவும், அவற்றை வழிமறித்து அழிக்கவும் இந்த லேசர் தாக்குதல் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவையாக லேசர் ஆயுதங்கள் உருவெடுத்துள்ளது ஒரு புரட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: MISSILEBunker BusterSpace ForceSM-3StealthshipaircraftIranUS Army
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பை களவாடும் கயவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies