மேகதாது விவகாரத்தில் உதயநிதியின் கோரிக்கையை தனித் தீர்மானத்தில் சேர்த்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என உதயநிதி முன்வைத்த கோரிக்கையை தீர்மானத்தில் சேர்ப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருத்தத்துடன் கூடிய தீர்மானம், முன்மொழியப்படாமல், வாக்கெடுப்பிற்கு விடப்படாமல் நிறைவேற்றப்பட்டது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது என கூறியுள்ளார்.
அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருத்திய தீர்மானம், அரசினர் தனித் தீர்மானம் ஆகாது எனவும்,இந்த தீர்மானம் யாரை மகிழ்விக்க?.. யாரை வஞ்சிக்க?.. எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
















