திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் இப்பகுதியில் ஏராளமான நபர்கள் மது அருந்த வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருவோர் அநாகரிகமாக நடந்து கொள்வதுடன், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை முறையிடுடம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















