சேலம் மாவட்டம் மறவனேரியில் அரசு கல்லூரி மாணவர்கள் மீது வெளிநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறவனேரி அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலர், விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். அங்கு சில மாணவர்கள் ஆன்லைனில் கேம் விளையாடியதாகவும், இதனால் வேறு சில இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் விடுதியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விடுதியின் காப்பாளர் மற்றும் மாவட்ட அலுவலர் சரிவர பணிக்கு வருவதில்லை என கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
















