சென்னை அருகே காணாமல்போன சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புல்லு தாஸ் – ரிங்கு தேவி தம்பதி சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேனி பகுதியில் 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களது மகள் அனிஷா கடந்த 3ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமி அனிஷாவை தேடி வந்த போலீசார் செங்கழுநீர் மலை குட்டையில் சடலமாக கண்டெடுத்தனர்.
இந்தநிலையில் பீகாரைச் சேர்ந்த சுதான்சு என்ற நபருடன்தான் தனது தங்கையை கடைசியாக பார்த்தாகவும், அதற்கு பிறகு தன் தங்கையை காணவில்லை எனவும் அனிஷாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுதான்சு இரவோடு இரவாக வீட்டை காலி செய்ததால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக அனிஷாவின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.
















