கியூபாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர்.
அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதி தடை, வெனிசுலா மற்றும் மெக்சிகோ மீதான வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கியூபாவுக்கு எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் பல கிலோமீட்டா் தூரத்துக்கு அணிவகுத்தும் நிறுத்தும் வாகன நெரிசலைத் தவிர்க்க, கியூபா அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் முன்பதிவு செய்வோரும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் ஹவானா உட்பட மேற்கு பகுதியில் உள்ள பல மாகாணங்களில் மிகப்பெரும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
தேசிய மின் ஆலையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, பினார் டெல் ரியோ முதல் கமாகுய் வரையிலான பகுதிகளும் இருளில் மூழ்கியுள்ளன.
இது நாட்டின் மூன்று பங்கு பகுதியை உள்ளடக்கியது. இதற்கிடையே, அண்டை நாடான ஈக்வடார், கியூபாவுக்கான துாதர் மற்றும் ஊழியர்களை, 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இது கியூபாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் அழுத்தம் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
















